Monday 13 June 2016

பொன்பரப்பி தமிழரசன்

பொன்பரப்பி தமிழரசன்



தோழர் தமிழரசன் ஒரு வரலாற்று பார்வை

தமிழக விடுதலையை உலகிற்கு உணர்த்திய தமிழர் நாட்டின் முதல் தலைவன் தோழர் தமிழரசன்


இந்த நிகழ்வுகள் கடந்த காலங்களில் ஊடகங்களில் சரியாக வெளிக்கொணரப்படவில்லை என்பது மட்டும் அல்லாமல் இதனை திரித்து பொய்க்கதை எழுதி மறக்கடித்தப் பெருமையும் வெகுஜன ஊடகங்களுக்கு உண்டு. 1947 விடுதலைக்குப் பிறகு இந்தியாவின் பல மாநிலங்களில் ஆதிக்க சாதி பண்ணைக்காரர்களின் ஆதிக்கம் தலைவிரித்தாடிய காலக்கட்டத்தில் இந்தியாவெங்கும் இடதுசாரி தீவிரவாத இயக்கங்கள் தோன்ற ஆரம்பித்தன. இந்த இயக்கங்களின் செயல்பாடு தீவிரமாகி 1960களின் பிற்பகுதியில் மேற்குவங்காளத்தில் மார்க்சிஸ்ட், லெனினிஸ்ட் அமைப்பான மக்கள் யுத்தக் குழு - People's War Group - PWG தோன்றியது. இந்த அமைப்பு மேற்கு வங்காளம், ஆந்திரா மற்றும் தமிழகத்திலும் பரவியது. குறிப்பாக தமிழகத்தின் வடமாவட்டங்களில் இந்த அமைப்பு வேகமாக வளர்ந்தது.


கடலூர், ஜெயங்கொண்டம், பெரம்பலூர், பென்னாடம், தருமபுரி போன்ற பின் தங்கிய கிராமங்களில் தான் இந்த இயக்கம் வளர துவங்கியது. இதற்கு இந்தப் பகுதியில் நிலவிய சமூக, பொருளாதார சூழலும் முக்கிய காரணம். வடமாவட்டங்களில் பெரும்பாலான நிலங்கள் வானம் பார்த்த பூமி தான். இந்தப் பகுதியின் முக்கிய பொருளாதாரம் முந்திரி. முந்திரி வருடம் முழுக்க மகசூல் கொடுக்க கூடிய பயிர் அல்ல. வருடத்திற்கு சில மாதங்கள் மட்டுமே முந்திரி கிடைக்கும். பிறகு சீண்டுவார் இல்லை. 
இந்த முந்திரி காடுகளும் சிறு விவாசாயிகள் சொந்தமாக வைத்துக் கொள்ளக்கூடியவை அல்ல. பெரும் பண்ணைக்காரார்கள் வசம் தான் நிலங்கள் இருந்தன. இப்பகுதியின் பெரும்பான்மை மக்களான வன்னிய, தலித் மக்கள் இந்தப் பண்ணைக்காரர்களின் நிலங்களில் கூலி வேலை செய்பவர்களாக இருந்து வந்தனர். பிற மாநிலங்களில் பண்ணைக்காரர்கள் - அடித்தட்டு ஒடுக்கப்பட்ட மக்களிடையேயான போராட்டம் வெடித்த பொழுது இப்பகுதியிலும் இந்தப் போராட்டம் வேரூன்ற தொடங்கியது.

நக்சலைட் இயக்கங்களும் தமிழ் மண்ணில் அறிமுகமாகின. நக்சலைட் இயக்கமாக ஆரம்பித்த இந்தப் போராட்டம் பின் தமிழ் தேசியமாக, ஆயுதப் போராட்டம் மூலம் தமிழ் தேசியத்தை அடையும் இயக்கமாக உருவெடுத்தது. தமிழகத்தின் முதல் குண்டுவெடிப்பும் இப்பகுதியில் தான் நடந்தேறியது. அதனை அறிமுகப்படுத்தியர் பென்னாடத்தைச் சேர்ந்த புலவர் கலியபெருமாள். பள்ளி ஆசிரியராக இருந்த புலவர் கலியபெருமாள் "மக்கள் யுத்தக் குழு" இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பு உடையவர். மேற்குவங்க நக்சலைட் தலைவர் சாரு மஜும்தாருடனும் இவருக்கு நெருங்கிய தொடர்பு உண்டு. 

புலவர் கலியபெருமாள் மூலமாக நக்சலைட் இயக்கம் வடமாவட்டங்களில் பரவ ஆரம்பித்தது. 1970ம் ஆண்டு புலவர் வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்ட பொழுது அந்த குண்டுகள் வெடித்ததால், தீவிரவாத இயக்கம் பற்றிய செய்திகள் வெளிவரத்தொடங்கின. அவர் மீது கொலைக்குற்றம் போன்ற பொய்வழக்குகள் சுமத்தப்பட்டு அரசு அவரை சிறையில் அடைத்தது. நக்சலைட் இயக்கத்தின் திருப்பு முனையாக இத் தருணத்தில் தோழர் தமிழரசன் உருவாகினார். 1980களில் இந்த இயக்கம் மிக வேகமாக வளர முக்கிய காரணம் தோழர் தமிழரசன் தான். People war Group இயக்கத்தின் பொலிட்பீரோ உறுப்பினராகவும் அவர் உயர்ந்தார். 
சாதியில்லா சமுதாயம் அமைப்பது, பண்னை நிலங்களை ஏழை மக்களுக்கு கொடுப்பது போன்றவை இவரின் முக்கிய கொள்கைகளாக இருந்தன. அதே சமயத்தில் தமிழ் தேசியம், தனித் தமிழ்நாடு போன்ற கோரிக்கைகளில் நம்பிக்கை உடையவராக தமிழரசன் விளங்கினார். 1985ம் ஆண்டு தமிழ் ஈழத்திற்கு ஆதராக தமிழகத்தில் உணர்வு அலைகள் கரைபுரண்ட பொழுது, தோழர் தமிழரசன், புலவர் கலியபெருமாள் போன்றோர் தங்களை தமிழ்தேசிய உணர்வுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டனர். இதனால் மக்கள் யுத்தக் குழுவில் இருந்து தோழர் தமிழரசன், புலவர் கலியபெருமாள் இருவரும் நீக்கப்பட்டனர். இதன் பிறகு தமிழ்நாடு மார்க்சிஸ்ட், லெனினிஸ்ட் கட்சியை இருவரும் துவங்கினர். இக் கட்சியின் ஆயுதப் பிரிவாக "தமிழ்நாடு விடுதலைப் படை (TNLA)" என்ற அமைப்பை தோழர் தமிழரசன் தோற்றுவித்தார். 

தமிழரசன் ( 14.4.1945 - 1.9.1987 ) தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சியின் நிறுவனர்களில் ஒருவர். அதன் பொதுச் செயலர் பொறுப்பிலிருந்தவர். அக்கட்சியின் ஆயுதப்பிரிவாக தமிழ்நாடு விடுதலைப்படையை நிறுவியவர். இந்தியாவிலிருந்து தமிழ்நாடு அரசியல் விடுதலை பெற வேண்டும் எனும் கருத்தியலை மார்க்சிய இலெனினிய சிந்தனையோட்டத்தின் வழியே முன்வைத்தவர் என்ற வகையிலும் அதற்கான போராட்டத்தில் நடைமுறைத் தீவிரம் மிக்கவர் என்ற வகையிலும் தமிழ்நாட்டு வரலாற்றில் இவர் குறிப்பிடத்தகுந்தவராவார்.

தமிழரசன் மதகளிர் மாணிக்கம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். கோவை பொறியியல் கல்லூரியில் பொறியியல் படித்துக் கொண்டிருந்தார். அப்போது மேற்கு வங்கத்தில் நக்சல்பாரி கிராமத்தில் 1967-ல் விவசாய எழுச்சி உண்டானது. அதைத் தொடர்ந்து கல்லூரியைவிட்டு வெளியேறுவோம் கிராமங்களுக்குச் செல்வோம் என்று சாரு மஜும்தார் வேண்டுகோலை ஏற்று நாட்டின் பல பகுதிகளில் நக்சலைட் எனப்படும் இ.க.க.(மா.லெ) இயக்கத்தில் இளைஞர்கள் இணைந்தனர். தமிழரசனும் நக்சலைட் இயக்கத்தில் சேர படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு இயக்கத்தில் இணைந்தார்.[1] சாருமஜும்தாரின் கோட்பாட்டின்படி மக்களை வாட்டும் பணக்காரர்களையும், கந்துவட்டிக்காரர்களையும் அழித்தோழிப்பு செய்துவந்தார்.

பொறியியல் பயின்ற தோழர் தமிழரசன் குண்டுகள் தயாரிப்பதிலும் வல்லவராக இருந்தார். 1985ம் ஆண்டு துவங்கி 2000வரை கணக்கெடுத்தால் தமிழத்தின் பல இடங்களில் சுமார் 80க்கும் மேற்பட்ட குண்டுவெடிப்புகளை இந்த இயக்கம் நடத்தியது. மைய அரசின் தளங்களை தான் இந்த அமைப்பு குறிவைத்து தாக்கியது. தனித்தமிழ்நாட்டை உருவாக்கி அங்கு சாதிபேதமில்லா சமதர்ம சமுதாயத்தை அமைப்பது தான் தன்னுடைய லட்சியம் என்று தமிழரசன் முழங்குவார்.

பண்ணைக்காரர்களிடம் இருந்து கைப்பற்றிய பணத்தையும், பொருளையும் ஏழைகளுக்கு அளிப்பார். மக்களை தமிழரசன் மிகவும் நேசித்தார். மக்களுக்காக வாழ்வது தான் அவரது லட்சியமாக இருந்தது. 1987ம் ஆண்டு, செப்டம்பர் 1ம் நாள் பொன்பரப்பி கிராமத்தில், தன் இயக்கத்திற்கு பொருள் சேர்ப்பதற்காக தமிழரசன் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டார். பொன்பரப்பியில் இருந்த ஸ்டேட் பாங்க் வங்கியை கொள்ளை அடித்து விட்டு வெளியேறும் பொழுது அவரை அடையாளம் தெரியாமல், அவர் "தோழர் தமிழரசன்" தான் என்று தெரியாமல் ஊர் மக்கள் தாக்கினர். அப்பொழுது அவரிடம் குண்டுகளுடன் துப்பாக்கி இருந்தது. அந்த துப்பாக்கியை பொதுமக்கள் மீது சுட்டிருந்தால், மக்கள் ஓட்டம்பிடித்திருப்பர். குறைந்தபட்சம் அந்த துப்பாக்கியை பொதுமக்கள் மீது சுடப்போவதாக நீட்டியிருந்தால் கூட மக்கள் நெருங்கியிருக்க மாட்டார்கள். ஆனால் தன் மக்களை மிகவும் நேசித்த தோழர் அவர்களை சுடப்போவதாக கூட சொல்ல வில்லை. எந்த மக்களுக்காக போராடினாரோ, அதே மக்களின் கையில் அடிபட்டு இறந்தார். இதை விட ஒரு சோகமான விடயம் பொன்பரப்பி தமிழரசனின் சொந்த கிராமம். தன்னை வெளிப்படுத்தினால் எங்கே தன்னை ஒரு கொள்ளையனாக தன் ஊர் மக்கள் நினைத்து விடுவார்களோ என்று எண்ணி தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமலே தோழர் மறைந்து போனார். 

கொல்லப்பட்டது தமிழரசன் தான் என்று பிறகு கேள்விபட்டவுடன் பொன்பரப்பிலும், பிற கிராமங்களிலும் நிலவிய சோகம் இன்றும் என் நினைவில் நிற்கிறது. இப்பகுதி மக்கள் தமிழரசனை நேசித்தனர். அவரது முகம் கூட தெரியாமல் அவரது சேவைகள் மட்டுமே பலர் நினைவில் இருந்தது. இன்றும் நிற்கிறது. தோழர் தமிழரசனின் ஆயுதப் போராட்டம் இன்றைய காலக்கட்டத்தில் அர்த்தமற்றவையாக தெரியலாம். ஆனால் 1980களில் இப் பகுதியில் நிலவிய வறுமை, அறியாமை போன்றவையுடன் பொருத்தி பார்த்தால் அவருடைய போராட்டத்தின் பொருள் விளங்கும். தமிழகத்தின் அத்தனை ஊடகங்களும் இந்த நிகழ்ச்சி குறித்து பொய்க்கதைகளை தான் அவிழ்த்து விட்டனவே தவிர ஒரு பத்திரிக்கை கூட உண்மை நிலையை எழுதவில்லை. தமிழக வரலாற்றில் மக்களை நேசித்த மாமனிதர்கள் பட்டியலில் தமிழரசனின் பெயர் முக்கியமானது. என்னைப் பொருத்தவரை நான் வாழ்ந்த காலக்கட்டத்தில் கண்ட முக்கியமான தியாகம் இது (இதேக் காலக்கட்டத்தில் என்னை மிகவும் பாதித்த மற்றொரு நிகழ்வு திலீபனின் மரணம்) செப்டம்பர் 1ம் தேதி அவரது நினைவு நாள்: தமிழர் நாட்டின் தலைவனுக்கு வீர வணக்கம். உன்போராட்டம் இளைய தலைமுறை பிள்ளைகளால் வெல்லப்படும்

Thursday 4 February 2016

அரியலூரை ஆண்ட மழவராயர் வம்ச வரலாறு

மழவராயர் வம்சம்

சோழனும் வீழ்ந்தான் , சேரனும் வீழ்ந்தான், பாண்டியனும் வீழ்ந்தான். ஆனால்  எந்த சலனமும் இல்லாமல் 1000 ஆண்டுகளுக்கு மேல் தமிழகத்தில் நிலைத்து நின்று தமிழகத்திலும் ஈழத்திலும் ஆண்டு  வந்த ஒரே வம்சம். வன்னியர் குல க்ஷத்ரிய வம்சத்தை சேர்ந்த மழவராய வம்சம் தான் 


மழவராய வம்ச வரலாறு 

மழவர் என்றால் இளமையான நிலா பகுதியில் இருந்து வந்தவர் என்று அர்த்தம் . மழவர் குடிமக்கள் தண்டாரணியம், குதிரைமலை, அதியமானின் தகடூர், ஓரியின் கொல்லிமலை, திருச்சியில் உள்ள திருப்பாச்சில் போன்ற தமிழ்நாட்டின் பலப் பகுதிகளில் வாழ்ந்துவந்த சங்ககால மக்கள்.

இவர்கள் சேர வழி வந்தவர்கள் என்பதற்கு பல ஆதாரங்கள் உண்டு. சோழ குல பெண்களில் மிக உயர்ந்தவராக கருத படும் செம்பியன் மாதேவி மழவர் வழி வந்தவர்

இத்தகைய மழவர்களை ஆட்சி செய்த மன்னர் மழவராயர் என பட்டனர். இம்மழவ்ராயர்கள் அரியலூரை தலைநகராக கொண்டு 1000 ஆண்டுகளுக்கு மேலாக ஆண்டு வந்துள்ளனர் . அவர்கள் ஆண்ட பகுதி இவர்களுடைய பெயராலேயே திருமழபாடி என்று அழைக்கபடுகிரது,

அரியலூர் மழவராயர் பற்றி சோழர் காலத்தில் கண்டெடுக்க பட்ட கல்வெட்டு 

அரியலூர் மழவராயர்கள், சோழ மன்னன் வீர ராஜேந்திர சோழனின் (கி.பி. 1070) நன்னிலம் கல்வெட்டிலும் குறிப்பிடப்படுகிறார்கள்

தடூரில் மழவர்கள் 

தகடூர் நாட்டை(தருமபுரி ) ஆண்ட மன்னன் அதியமான் தமிழரில் வீரஞ்செறிந்த குடியினரான மழவர்கள் இனத்தை சேர்ந்தவன், எனவே அவனை புலவர் அவ்வையார் அதியமானை மழவர் பெருமகன் என்று மிக அழகாக பெருமிதமாக குறிப்பிடுகின்றார். தகடூர் நாட்டில் இவர்கள் பெருந்தக்குடியினர், ஆளும்வர்க்கதினர், நாடாண்டமரபினர் இவர்களே பின்னர் மழவராயர் என்று அழைக்கபடுகின்றனர். இந்த மழவர்களே தகடூர் நாட்டில் வழி வழியாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் மழவர் பெருமகனான அதியமானின் மரபுவழி மக்களாவர். இவர்கள் தகடூர் நாட்டில் தனித் தமிழ் இனமாகும். இவர்களுக்கென்று தனிநாடு தகடூர் நாடு, இவர்களின் தலைநகரம் தகடூராகும். இவர்களின் குடியில் மாபெரும் வீரனும் மன்னனுமான அதியமான் நெடுமானஞ்சி புகழ் அரசனாவான். 

தகடூர் நாட்டில் வில்லின் நானேற்றி அம்பு தொடுத்து போரிடும் மழவர்களை மறவர்களை கொண்டிருந்தது என்று பதிற்றுப்பத்தில் அர்சில்கிழார் கூறுகின்றார். அகநானூற்றில் 187 ம் பாடலில் மாமூலனார் மழவர்களின் போர்த்திறனையும் அவர்களது குதிரையின் சிறப்பையும் அவர்களது கால்களில் வீரக்கழல்கள் போலிந்ததையும் கறுத்தோரை பகைவரை பிறழ்ந்து நோக்கி வீரத்தோடு போரிட்டு அழிக்கும் ஆற்றலையும் வன்கண் மழவர் என்றும் தறுகண்மையையுடையவர் என்றும் குறிப்பிட்டு தகடூர் நாட்டில் மழவர் முதன் முதலாக அம்புவிடும் நாள் விழா தொடை விழா என்று கொண்டாடுவார்கள் என்றும் குறிப்பிடுகின்றனர். 

தகடூர் நாடு மழவர் நாடு:-


“கழல்புனை திருந்தடிக் கள்வர் கோமான்
மழபுலம் வணக்கிய மாவண் புல்லி
விழவுடை விழுச்சீர் வேங்கடம் பெறினும்
பழகுவர் ஆதலோ அரிதே – முனாஅது
முழவுறழ் திணிதோள் நெடுவேல் ஆவி”
-            -அகம்: 61 (மாமூலனார்)

வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து 

டாக்டர் மா. இராசமாணிக்கனார் அவர்கள்

 பத்துப்பாட்டு ஆராய்ச்சி என்னும் நூலில் அரியலூர் மழவராயர்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்கள். அவர்கள் சங்ககால மழவர்களின் மரபினர்கள் என்றும் அவர்கள் வன்னியருள் படையாட்சி மரபினர்கள் என்றும் ஒப்பிலா அம்மனை வழிப்படுபவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.
அரியலூர் மழவராயர்களைப் பற்றிய குறிப்புகள் சங்க காலம் முதற்கொண்டு கி.பி. 20 ஆம் நூற்றாண்டு வரை காணப்படுவதாகவும், டாக்டர் மா. இராசமாணிக்கனார் அவர்கள் குறிப்பிட்டு பற்பல சான்றுகளையும் கொடுத்துள்ளார்கள். அவற்றில் ஒன்று :-
"இரண்டாம் மாற வர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி. 1239 - 1251) தனது பத்தாம் ஆட்சியாண்டில், ஐயன் மழவராயன் விருப்பப்படி, திருமாலுகந்தான் கோவில் என்னும் ஊரிலுள்ள ஒப்பிலா முலையார் என்ற அம்மன் கோவிலுக்கு வரியிலியாக நிலங்களை விட்டான் என்று குறிப்பிடுகிறார்"

டாக்டர் மா. இராசமாணிக்கனார் அவர்கள் குறிப்பிட்ட "ஐயன் மழவராயன்" அவர்கள் இரண்டாம் மாற வர்மன் சுந்தர பாண்டியனின் (கி.பி. 1239 - 1251) ஆட்சி காலத்தில் மதுரை அழகர் கோயிலுக்கும், திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கும் கொடைகள் வழங்கியுள்ளதை கல்வெட்டு சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன.


தமிழ் தாத்தா உ .வே .சாமிநாத ஐயர் 

மழவராயர் பற்றி  அவர்கள் கூறுவது 



(ஆதாரம் நல்லூர் கோவை . உ.வே சா )


தொல்லியல் அறிஞர் நடன. காசிநாதன் ஐயா 

அவர்கள், அரியலூர் மழவராயர்களைப் பற்றி "வன்னியர்" என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்கள். கர்னல் மெக்கென்சி சேகரித்த குறிப்புக்களில் "அரியலூர் பாளையக்காரர் கைபீது (கி.பி. 1805)" என்ற கைபீதும் ஒன்றாகும். இக் கைபீது "மாளவராயர் அரியலூர் பாளையக்காரர் ஸம்ஸ்தானம் மதுரை, திருச்சிராப்பள்ளி வகையறா" என்று தொடங்கப்பெற்றிருக்கிறது. ஜாதியில் வன்னிய குலத்தவர்களுடைய வமிசாவளி என்று குறிப்பிடுவதாக தொல்லியல் அறிஞர் நடன. காசிநாதன் ஐயா அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

அரியலூர் பாளையக்காரர்களின் சமஸ்தானம் "மதுரை திருச்சிராப்பள்ளி வகையறா" என்று கைபீது தெளிவாக குறிப்பிடுவதால், வன்னிய குல க்ஷத்ரியர்களான மழவராயர்கள் சோழர் மற்றும் பாண்டியர் காலங்களில் மதுரையை ஆட்சி செய்திருக்கிறார்கள் என்று தெரியவருகிறது. மேலும் கைபீது "பள்ளிக் கொண்ட ஒப்பிலா மழவராயர்" என்ற அரியலூர் அரசரை குறிப்பிட்டு அவருடைய ஆட்சியாண்டையும் (கி.பி. 1422 - 1457) குறிப்பிடுகிறது.

பாண்டியர்களுடைய பல கல்வெட்டுகளில் "பள்ளிப் பீட மழவராயன்" என்றும் "பள்ளிக் கட்டில் மழவராயன்" என்றும் குறிப்பிடப்படுகிறது. இப் பெயர்கள் என்பது பாண்டிய அரசர்கள் தாங்கள் பயன்படுத்திய "பள்ளிக் கட்டிலாகும்". அதாவது "பாண்டிய அரசர்களது சிம்மாசனமாகும்". அத்தகைய பெருமைமிகு சிம்மாசனத்திற்கு வன்னியர்களான மழவராயர்களது பெயரினை பாண்டியர்கள் வைத்திருக்கிறார்கள் என்பது வன்னியர்களுக்கு கிடைத்த மிகப்பெரும் பெருமையாகும். இதன் மூலம் "பள்ளி" என்னும் சொல் "வேந்தனை" குறிப்பிடும் சொல்லாக அறியமுடிகிறது.

கல்வெட்டுகள்  :-



அரியலூர் மழவராயர்களைப் பற்றி பல கல்வெட்டுகளும் செப்பேடுகளும் காணக்கிடைகின்றன. அவர்கள் பல கோயில்களை எழுப்பியும் கொடைகளை வழங்கியும் வரலாற்றில் புகழ் பெற்றிருக்கிறார்கள். அரியலூரில் கோதண்டராமஸ்வாமி கோயிலில் மழவராயர்கள் கட்டிய "தசவதார மண்டபம்" என்பது தமிழகத்தில் வேறெங்கும் காணக் கிடைக்காததாகும்.

"விளை நிலத்துக்கு கிழ்பாற் கெல்லை கன்னரதேவன் மருதமாணிக்க தேவன் நிலத்துக்கு மேற்கும் தென்பாற் கெல்லை அரியலூருடையான் மழவதரையன் நில......."

அறியலுரடையான் மழவதரையன் என்பதன் மூலம் கிபி 1070 கலிலியே  மழவராயர்கள் அரியலூரை ஆண்டுவருவது புலப்படும் 

மேலும் ஒரு நன்னிலம் கல்வெட்டு "பரமேச்சுவர மங்கலத்து அரியலூருடையான்" என்று குறிப்பிடுகிறது. அக் கல்வெட்டு கி.பி. 12 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த ஸ்ரீ வல்லபப் பண்டியனுடையதாகும்.

அடுத்த தாக 13ம் நூற்றாண்டில் பாண்டியர் காலத்தில் மழவராயர் பற்றிய கல்வெட்டு கிடைக்க பெற்றுள்ளது 

கல்வெட்டின் தொடர்ச்சி 

இதன் மூலம் சோழர்  பாண்டியர் காலம் முதலே மழவரயார்கள் ஆண்டு வந்தது உறுதிசெய்ய படும் . மேலும் இம்மனர்கள் வம்சத்தை பட்டியலிட்டு முறையாக வெளியிடப்பட்டுள்ளது 




இதன் மூலம்  1808 ஆண்டு வரை சுமார் 497 ஆண்டுகள் அதாவது கிபி 1308 முதல் ஆண்டு வந்த மழவராய மன்னர்களை பெயர்களை அறிய முடிகிறது 


செப்பேடுகள் 

புதுகோட்டை செப்பேடு 


கி.பி. 1450 ஆம் ஆண்டில் "பள்ளி கொண்ட பெருமாள் மழவராயர்" என்ற அரசர் பட்டுக்கோட்டைப் பகுதிக்குத் தலைவனாயிருந்தான் என்று திருச்சிற்றேமம் கல்வெட்டு ஒன்று தெரிவிக்கிறது. கி.பி. 1582 ஆம் ஆண்டின் புதுக்கோட்டை செப்பேட்டில் வன்னியர்களான அரியலூர் மழவராயர், பருவூர் கச்சியராயர், பிச்சாவரம் சோழகனார் மற்றும் உடையார்பாளையம் காலாட்கள் தோழ உடையார் குறிப்பிடப்படுகிறார்கள்


    எனவே வன்னிய அரசர்கள் புதுக்கோட்டை பகுதியை கி.பி. 16 ஆம் நூற்றாண்டிலும் அரசாட்சி செய்திருக்கிறார்கள் என்று தெரியவருகிறது. கள்ளர் குல தொண்டைமான்கள் கி.பி. 1686 ஆம் ஆண்டு முதலே (கி.பி. 17 ஆம் நூற்றாண்டின் இறுதி காலகட்டம்) புதுக்கோட்டைப் பகுதியை அரசாட்சி செலுத்த தொடங்கினார்கள் என்பது வரலாறாகும்.


அரியலூர் செப்பேடு 



கிபி 1703ம் ஆண்டு எழுதப்பட்ட செப்பேடு சிதம்பரத்தில் வீரமாயேசுர சமைய (வீரசைவர் )  மடம் அமைத்துள்ள பாதபூசை அம்பலத்தடிகளுக்கு ஒப்பிலா மழவராயர் பராபரை நன்மைக்காக கொடுத்த தர்ம சாதன பட்டயம் 






 திருமானூர் செப்பேடு 


கிபி 1790ம் ஆண்டு எழுதப்பட்ட இச்செப்பேடு,  திருமானூரில் உள்ள ஸ்ரீகயிலாசநாதர் கோவிலுக்கு ஸ்ரீ விசைய ஒப்பில்லாத மழவராயர் குமாரர் ஸ்ரீ குமர ஒப்பில்லா மழவராயர் பிராமணருக்கு அழித்துள்ள நில கோடையை குறிப்பிட்டுள்ளது 



வன்னிய குலத்தவரான மழவராயர்கள் 

மழவராயர்கள் வன்னிய குலத்தவர் என்பதை கீழ் காணும் ஆதாரங்கள் மூலம் அறிய முடிகிறது 

 


"ராச ராச வள நாட்டு ராசெந்திர சொழ வளநாட்டுள் மிழலை 

நாட்டுள்ச் செர்ந்த சொழவளமாகிய தலத்துள் வன்னியர் குல

கிரில தரில நாட்டுக் அதிபதியராகிய குண்ணத்தூர்க் கட்டியப்ப

நாயினார் குமாரர் நாகய மளவாரய நயினாரவர்களும் 

பென்னாடகம் பிரளையங்காத்த கடந்தையார் கொத்திரத்தில்

பொன்னளந்த கடந்தை குமாரன் பெரியனாயக்க நயினாரவர்களும்

நம்முட குண்ணத்தூர் காணிக்கும் பென்னாடக காணிக்கும்"


(South Indian Temple Inscriptions, Vol-III (Part-1), 1511 A.D.)

மேலே குறிப்பிடும் கல்வட்டு அரியலூர் மழவராயர்களை வன்னிய குலத்தவர் என்று குறிப்பிடுகிறது, மேலும் பென்னாடத்தை ஆண்ட கடந்தையார்களையும்  வன்னிய குலம் என்றும் இருவரும் உறவினர் என்றும் அறிய முடிகிறது 

கோதண்டராமசுவாமி சதகம்

இராமதாச பரம பாகவதர் எழுதிய   கோதண்டராமசுவாமி சதகம், மழவராயரை வன்னிய குல சந்திரன் என்று குறிபிடுகிறது  


"மகா ராஜ ராஜ ஸ்ரீ வன்னிய குல சந்திரன் மகிதலத்தினில் 

இந்திரன்"  (அரியலூர் அரசர் விஜய ஒப்பிலாத மழவராயர்) 


(பாடல்-101)

இராமச்சந்திர கவிராயரின் பாடல்


கள்ளிக்கேன் முள்வேலி கழுதைக்கேன் 

           கடிவாளம் கறுப்பில் லாத
உள்ளிக்கேன் பரிமளங்கள் உவர்நிலத்துக் கேன்
            விதைகள் ஒடிந்து போகும்
சுள்ளிக்கேன் கோடாலி துடைப்பத்திற் கேன்
            கவசம் சும்மா போகும்
பள்ளிக்கேன் அதிவீர மழவரங்க 
            பூபனெனும் பட்டந் தானே

(ஆதாரம்: இராமச்சந்திரக் கவிராயர் தனிப்பாடல்கள் ( 21) https://ta.wikisource.org/s/3ob)
வெள்ளாலரான இராமச்சந்திர கவிராயர் மழவராயரை "பள்ளி" என்று கூறும் பாடல். 
இதில் கவிஞர் மழவராயரை வசை பாடியுள்ளார் . காரணம் அவர் பாடிய பாட்டுக்கு பரிசு தராத கோவம் . அனால் மழவராயர்கள்  எப்படி பட்ட கொடையாளர்கள்  என்பதற்கு அவர்கள்  பற்றி மேலே கூறியுள்ள செப்பேடுகள் தான் சாட்சி. 

நல்லூர் கோவை . 

நல்லூர் கோவை எனும் நூலில்  உ.வே சா அவர்கள் மழவராயர்கள் வன்னிய மரபினர் என்று குறிபிடுகிறார் 



(ஆதாரம் நல்லூர் கோவை . உ.வே சா ) 
(http://www.tamilnavarasam.com/Ilakkiyam/U.Ve_Sa/Nalluru_kovai.pdf)

Trichinopoly District Gazetteer 

ஆங்கிலேயரால் வெளியிடப்பட்ட திருச்சிராப்பள்ளி கசட்டர் மழவராயர்களை வன்னியர் பிரிவான படையாட்சி என்கிறது 



படியளந்த ஜமீன்தார்

தேவாலயத்துக்கு நிலம் வழங்கியவர் 

1736ம் ஆண்டு மழவரயார் ஜமிந்தாரான ரங்கப்ப மழவராயர் கிறிஸ்துவ தேவாலயம் கட்டுவதற்காக 175 ஏக்கர் நிலம் தானமாக வழங்கியுள்ளார். இதை உறுதி செய்யும் கல்வெட்டு இன்று அந்த தேவாலயத்தில் உள்ளது 

(ஆதாரம் : Caste, Catholic Christianity, and the Language of Conversion: Social Change and Cultural Translation in Tamil Country, 1519-1774)


கவி வீரராகவ முதலியார் 

கிருஷ்ணைய ஒப்பிலாத மழவராயர் ஏழைகளுக்கு இரங்கும்
தன்மையினர். புலவர்களை ஆதரிக்கும் வள்ளல். தினந்தோறும் தம்மிடம்
விருந்தினர்களாக வந்தவர்களுக்கும் மற்றவர்களுக்கும் வேண்டிய பொருளை
வழங்குவதை முதற்கடமையாகக் கொண்டனர். அவரவர்களுக்கு
வேண்டியவைகளை அளந்து தரச் செய்தனர்.

கவி வீரராகவ முதலியார் வந்த காலத்தில் ஜமீன்தார் படியளந்து
கொண்டிருப்பதை அறிந்தார். பல பேர்களுக்கு வழங்க வேண்டியிருந்தமையின்
நெடுநேரமாயிற்று, அதை உணர்ந்த கவிஞருக்குப் பெருவியப்பு உண்டாயிற்று.
‘ஏதேது! இன்றைக்கு லக்ஷம் பேருக்குப் படி அளந்திருப்பார்போல் இருக்கிறதே’
என்று நினைத்தார். கவிஞர் நினைப்பதற்கும் மற்றவர்கள் நினைப்பதற்கும்
வித்தியாசம் இல்லையா? அவர் நினைப்பு ஒரு கவியாக மலர்ந்தது, ‘இந்த
ஒப்பில்லாத மழவராயருக்கு மகாவிஷ்ணு ஒப்பாவரோ? திருமால் அளந்தது
மூன்றுபடியே (படி-உலகம்) இவர் அளப்பது ஒரு நாளைக்கு லக்ஷம் இருக்குமே’
என்ற பொருளுடையது அந்தச் செய்யுள்:-

“சேயசெங் குன்றை வருமொப்பி லாதிக்குச் செங்கமலத்
தூயசெங் கண்ணன் இணையொப்ப னோதண் துழாயணிந்த
மாயன் அளக்கும் படிமூன்று க்ருஷ்ணைய மாமழவ
ராயன் அளக்கும் படியொரு நாளைக் கிலக்கமுண்டே.”

(ஆதாரம் நல்லூர் கோவை . உ.வே சா )

இவரை தான் சும்மா போகும் பள்ளி என்று கவிராயர் வசைபாடியுள்ளார் , இதன் மூலம் கவிஞரின் வன்மத்தை அறியலாம் . ஒரு வேலை சில வெள்ளலர்களை அடிமைகளாக வாங்கி மழவராயர்கள்  அடக்கி ஆண்டு வந்ததால் இந்த வன்மம் அவர்கள் மீது
வேளாளருக்கு வந்திருக்கலாம்.

  (ஆதாரம் : sii volume 8 AR 282 of 1903)

ஈழத்தில் மழவராயர் 

இம்மழவராயர்கலே ஈழத்தில் மழவதரசன் என்று அழைக்கப்பட்ட வன்னியர்கள். சோழர் காலத்தில் பல வன்னியர்கள் தொண்டைமண்டலதிளிருந்து குடியேறி ஈழத்தை ஆளதொடங்கினர்.அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் , மழவதரசன் குடி எனப்படும் மழவராயர் வம்சம், கச்சிலார் குடி  எனப்படும்  கச்சிராயர் வம்சம் மற்றும் படையாட்சி குடி, இவர்கள் ஈழத்திலும் வன்னியர் என்ற சாதியாகவே அடையாளபட்டுளன்னர். 

இவற்றை எல்லாம் உறுதி செய்யும் வகையில் பல்ல ஆதாரங்கள் உள்ளனர் அவற்றுள் முக்கியமானது "மட்டகளப்பு வரலாறு"   எனும் நூல் 

                                           (ஆதாரம்: மட்டகளப்பு வரலாறு)

கச்சிலார் குடி என்பது கச்சிராயர் என்று அழைக்கப்படும் காடவராயர் வழி வந்த பல்லவவம்சதினர் ஆவர் 

(ஆதாரம் : south Indian Inscriptions Vol 12 (No. 232 of 1916).)

காடவ மன்னனான குலோத்துங்க சோழ கச்சிராயனை வன்னியர் (பள்ளி) என்று சொல்லும்  கல்வெட்டு 

(ஆதாரம்: மட்டகளப்பு வரலாறு)

இவற்றை மீண்டும் உறுதி செய்கிறது இலங்கை ஆய்வாளர் வெள்ளவூர் கோபால்   அவர்கள் எழுதிய ஈழத்து வன்னியரும் தமிழகத்து வன்னியரும் என்ற நூல் 

(ஈழத்து வன்னியரான மழவதரசன் குடியை படையாட்சி குடி என்று விளக்கும் கல்வெட்டு )
(ஆதாரம் : ஈழத்து வன்னியரும் தமிழகத்து வன்னியரும்)

(ஈழத்தில் இருந்த படையாட்சி குலம் )
(ஆதாரம் : ஈழத்து வன்னியரும் தமிழகத்து வன்னியரும்)

மேலும் 19ம் நூற்றாண்டு வரை ஈழத்தில் வன்னியர் என்ற சாதி இருந்ததையும் கீழே உள்ள படம் விளக்குகிறது, மேலும் சிலர் வன்னியர் என்ற சாதியே ஈழத்தில் இல்லை  என்று கதை கட்டுகிறார்கள் . கீழே உள்ள படத்தில் வன்னியரும் தனி சாதியாக குறிப்பிடபட்டுள்ளனர். இந்த படம் 1826 இலங்கையில் எடுக்க பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின் பட்டியல்      



(ஆதாரம்: மட்டகளப்பு வரலாறு)
 (http://noolaham.net/project/38/3772/3772.pdf)

இதன் மூலம் ஈழத்தை ஆண்ட  மழவதரசன் குடி, கச்சிளார் குடி, படையாட்சி குடி, ஆகியவர்களே ஈழத்தை ஆண்ட வன்னியர் என்பதும், அவர்கள் தமிழகத்தின் தொண்டைமண்டலத்தில் வாழ்ந்து வரும் படையாட்சி, கவுண்டர் , நாயக்கர், கண்டர், மழவராயர், பள்ளி, கச்சிராயர், காடவராயர்  என்று  பட்டங்களை உடைய வன்னிய சாதியினரே என்பது ஆணி தனமான உண்மை ஆகும். 

References  

  • "நல்லூர் கோவை" - உ.வே சாமினாத ஐயர்            (http://www.tamilnavarasam.com/Ilakkiyam/U.Ve_Sa/Nalluru_kovai.pdf)
  • மட்டகளப்பு வரலாறு (http://noolaham.net/project/38/3772/3772.pdf)
  • South Indian Inscriptions Vol 12 (No. 232 of 1916).)
  • Trichinopoly District Gazetteer - 1907 
  • "இராமச்சந்திரக் கவிராயர் தனிப்பாடல்கள் - 21" ( https://ta.wikisource.org/s/3ob)
  • "கோதண்டராமசுவாமி சதகம் ( பாடல் 101)" -  இராமதாச பரம பாகவதர்
  • South Indian Temple Inscriptions, Vol-III (Part-1), 1511 A.D.
  • "பத்துப்பாட்டு ஆராய்ச்சி" - டாக்டர் மா. இராசமாணிக்கனார்
  •  "வன்னியர்" - நடன. காசிநாதன்
  • A.R.E 1978 No. 375, 381 
  • தமிழக செப்பேடுகள் (த.நா.அ.தொ.து) புதுகோட்டை செப்பேடு, அரியலூர் செப்பேடு,   திருமானூர் செப்பேடு   
  • Caste, Catholic Christianity, and the Language of Conversion: Social Change and Cultural Translation in Tamil Country, 1519-1774 ( https://books.google.co.in/books?id=MuYrGRpoNxwC&dq=rangappa+mazhavarayar&q=Rangappa+Mazhavarayar#v=snippet&q=Rangappa%20Mazhavarayar&f=false)
  • South Indian Inscriptions volume 8 AR 282 of 1903
  • "ஈழத்து வன்னியரும் தமிழகத்து வன்னியரும்" -  வெள்ளவூர் கோபால் 
  •  அகம்: 61 (மாமூலனார்)


=====நன்றி==== 


Thursday 21 January 2016

நீலகங்கரையர் மன்னர்கள் வன்னியர்களே (பள்ளி )

நீலகங்கரையர்கள்: வன்னியர்கள் என்று கல்வெட்டு ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது 

====================================================================

Neelangaraiyar Vanniyar Statue
சோழப் பேரரசு என்ற புகழ்மிகு மாளிகையை தாங்கி நின்ற வைரமணி தூண்களாக விளங்கிய குறுநில மன்னர்களிலே "நீலகங்கரையர்கள்" என்ற வம்சமும் ஒன்றாகும். இவர்கள் "வன்னிய குல க்ஷத்ரிய சமூகத்தை" சார்ந்த மன்னர்கள் ஆவார்கள். தொண்டை மண்டலத்தை சோழர்கள், பாண்டியர்கள், காடவர்கள் மற்றும் தெலுங்கு சோழர்கள் காலத்தில் ஆண்டவர்கள் நீலகங்கரைய மன்னர்கள். இவர்கள் சோழ மன்னர்களுக்கும் மற்றும் வாணகோவரையர்களுக்கும் உறவினர்கள் ஆவார்கள். இவர்களைப் பற்றி 80 மேற்பட்ட கல்வெட்டுகள் கிடைக்கின்றன.
----- xx ----- xx ----- xx -----
Neelangaraiyar Vanniyar Inscriptions

தாம்பரம் அருகில் உள்ள மணிமங்கலம் ராஜகோபால பெருமாள் கோயிலில் உள்ள மூன்றாம் குலோத்துங்கச் சோழனின் 12 ஆம் ஆட்சி ஆண்டுக் கல்வெட்டு (கி.பி.1189) நீலகங்கரைய மன்னர்களை "வன்னிய நாயன்" என்று சொல்கிறது (S.I.I. Vol-III, No.36, page 82 & 83). அது :-
"திருச்சுரத்துக் கண்ணப்பன் தூசி ஆதி நாயகன் நீலகங்கரையன்
வன்னிய நாயனான உத்தம நீதிக் கண்ணப்பன்" (6th Line of Inscription).
"இவ் வன்னிய நாயனான உத்தம நீதிக் கண்ணப்பர்" (9th Line of Inscription).

----- xx ----- xx ------ xx -----
Neelangaraiyar Vanniyar Inscriptions


விழுப்புரம் பிரம்மதேசத்தில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் உள்ள முதலாம் குலோத்துங்கச் சோழனின் 31 வது ஆட்சி ஆண்டுக் கல்வெட்டு (கி.பி.1101) ஒன்று நீலகங்கரைய மன்னரை "பள்ளி" என்று குறிப்பிடுகிறது (A.R.E. No.159 of 1918). அது :-
"உத்தமச் சோழ வளநாட்டு ஆமூரிருக்கும் பள்ளி ஆம்மூரி
பிச்சனான ராஜேந்திர சோழ நீலகங்கரையன்"
(Note : Palli community is mentioned in English as "Ryots" in certain inscriptions by the then scholars)
----- xx ----- xx ----- xx -----

விழுப்புரம் மாவட்டம், திருக்கோயிலூர் வட்டம், திம்மிச்சூரில் உள்ள பாண்டிய மன்னர் பெருமாள் குலசேகர தேவர் காலத்து கல்வெட்டு நீலகங்கரைய மன்னர் ஒருவரை "பள்ளி ஜாதி" என்று குறிப்பிடுகிறது (A.R.E. No.250 of 1936-1937). அது :-
"வேலூர் பள்ளி சமூகத்தை சேர்ந்த கூத்தன் நீலகங்கரையன்"
Neelangaraiyar Vanniyar Inscriptions

----- xx ----- xx ----- xx -----
தமிழ்நாடு அரசு கீழ்த்திசைச் சுவடிகள் வெளியிட்ட "இடங்கை வலங்கையர் வரலாறு" என்ற நூலில் "இடங்கை வலங்கை புராணத்தில்" நீலகங்கரையர்களை "பள்ளி", "வன்னியர்" என்று குறிப்பிடுகிறது. அது :-


"சர்வ ஜீவா தயாபரனான வில்வீர பராக்ரமனான ருத்ரப் பள்ளியர் குமாரராகிய நீலகங்கன், வஜ்ரபாகன், கங்கபரிபாலன், சம்புகுல வேந்தன்"
"நீலகங்கன் வரத்திலே வந்தவாள் என்ற பள்ளியர் க்ஷிர நதிக்கு உத்தரபாகம் க்ருஷ்ணாபர்யந்தரமும் இருந்த வன்னியர் கிருஷ்ண வன்னியர்"

----- xx ----- xx ----- xx -----

திருவள்ளூர், தொடுக்காடில் உள்ள சிவன் கோயில் மண்டபத்தினை "பஞ்சநதிவாண நீலகங்கரையன்", மூன்றாம் குலோத்துங்கச் சோழனின் 21 வது ஆட்சியாண்டில் (கி.பி.1191) கட்டியிருக்கிறார். அவரது சிலையும் அவரது ராணியின் சிலையும் அம் மண்டபதில் உள்ளது. அந்த புகைப்படம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
-----. xx ----- xx ----- xx -----

ஆதாரம் :
1. Indian Archaeology Review 1918
2. Indian Archaeology Review 1936-1937
3. South Indian Inscriptions Volume III

Tuesday 19 January 2016

பன்னாட்டார், தேவர்கள் என்று வன்னியருக்கு பட்டம் சூடிய சோழனும் பாண்டியனும்


வீர பராக்கிரமம் பொருந்திய சோழர் காலத்து வன்னியர் 

===================================================
தமிழக வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வாக பல அறிஞர்களால் கருதப்படும் "பெரிய வடுகன் கலவரம்". தமிழ் நாட்டு வரலாற்றில் வேற எந்த சமூகத்துக்கு இப்படி ஒரு பெருமைமிகு நிகழ்வு நடைபெற்றதில்லை. அதை விளக்குகிறது கிழே உள்ள "திட்டக்குடி கல்வெட்டு " 

அரியலூர் மாவட்டம் திட்டக்குடியில் உள்ள க்ஷத்ரிய மாற வர்மன் பராக்கிரம பாண்டியனின் (கி.பி.1338) கல்வெட்டில் வன்னியர்களின் விற்படை நிகழ்த்திய வீரச் செயலைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

விக்கிரம சோழனின் நான்காம் ஆட்சியாண்டில் (கி.பி.1122) கர்நாடகத்தில் போசல (ஹொய்சால) நாட்டை ஆண்டு வந்த முதலாம் விஷ்ணு வர்த்தனன் என்ற அரசன் சோழ நாட்டின் மீது படையெடுத்து வந்தான். இதனைப் பராக்கிரமப் பாண்டியனின் கல்வெட்டு "பெரியவடுகன் கலகம்" என்று குறிப்பிடுகிறது. சோழநாட்டின் மீது படையெடுத்த போசள மன்னன் ஆடுதுறை பகுதியிலும் தாக்குதல் நடத்தி ஆடுதுறை சிவன் கோயிலில் இருந்த தெய்வத் திருமேனிகளையும் நாயன்மார் மூவர் பிரதிமங்களையும் கவர்ந்து சென்று போசளர் தலைநகரமாகிய துவாரசமுத்திரத்தில் (Karnataka) வைத்திருந்தனர்.

பின்னர் இதனை அறிந்த ஆடுதுறை பகுதியை சேர்ந்த பள்ளிகள் (வன்னியர்கள்) அங்கிருந்து துவாரசமுத்திரம் சென்று போசளர்களுடன் பெரும் சண்டையிட்டு (நெடு அத்தம் குடுத்து), அவர்களால் கவரப்பெற்ற ஆடுதுறை கோயிலுக்குரிய தெய்வத் திருமேனிகளையும், நாயன்மார் மூவர் பிரதிமங்களையும் மீட்டு வந்து அத்திருவுருவங்களை மீண்டும் ஆடுதுறை சிவன் கோயிலிலேயே வைத்து நாள் வழிபாடுகள் செய்வதற்கு ஆண்டொன்றுக்கு 100 கலம் அரிசியும், 5000 காசும் கொடுப்பதாக ஒப்புக்கொண்டு அத்திருமேனிகளை வழிபாட்டில் வைத்தனர். அதற்காக அவர்கள் குடி ஒன்றுக்கு ஒருகுறுணி அரிசியும், 50 காசும், அமுதுபடி மற்றும் சாத்துபடிக்கு வில்லுக்கு ஒரு பணமாக வசூல் செய்வது என்று முடிவுசெய்தனர்.
சிலைகளை மீட்ட பள்ளிகளைக் கௌரவிக்கும் பொருட்டு, அவர்களுக்கு பட்டுப்பரிவட்ட மரியாதை கொடுத்து, இறைவன் திருமுன் நின்று வழிபாடு செய்யும் உரிமையும் அளித்து, "வந்தான் தேவர்கள் தேவன்" மற்றும் "பன்னாட்டார் தம்பிரான்" என்ற திருசின்னமும் (Royal Insignia) அளித்து வன்னியர்களின் வீரத்தை பெருமை படுத்தினார் இரண்டாம் குலோத்துங்கச் சோழன் அவர்கள் (பெருமாள் குலோத்துங்கச் சோழ தேவர் திருவாய் மலர்ந்தருளின படி). இதற்கான ஆணையை அவர் பிறப்பித்தார்கள் என்று கல்வெட்டு கூறுகின்றது.

கி.பி.1122 இல் விக்கிரம சோழன் காலத்தில் நடந்த ஒரு அருஞ் செயலுக்காக 216 ஆண்டுகள் கழித்து (சோழர் ஆட்சிக்குப் பிறகு), மாற வர்மன் பராக்கிரம பாண்டியன் காலத்தில் அதே பள்ளி இன மக்களுக்கு மரியாதை மற்றும் சலுகைகள் வழங்கியமை தமிழக வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாகும்.

கல்வெட்டில் இருந்து அறியப்படும் வன்னிய விற்படை குழுக்களில் பெயர்கள் (Bowmen Regiment) :-
"ஆய்க்குடியில் காணி உடைய பள்ளிகளில் பொன்னநான முடிகொண்ட சோழ முத்தரையன் உள்ளிட்டாரும்"
"ஓலைப்பாடியில் காணி உடைய பள்ளிகளில் காரி கிரிச்சன் விக்கிரம சோழ முத்தரையன் உள்ளிட்டாரும்"
"தொங்கபுரத்தில் காணி உடைய பள்ளிகளில் அழகந் அம்பலவன் குலோத்துங்க சோழ முத்தரையன் உள்ளிட்டாரும்"
"மகதை மண்டலத்து தொழுவூர் பற்றில் குறுக்கையில் காணி உடைய பள்ளிகளில் பாண்டியன் சொக்கன் மரகத சோழ முத்தரையன் உள்ளிட்டாரும்"


----- xx ----- xx ----- xx -----
கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள பள்ளிகளின் (வன்னியர்களின்) எல்லைப் பகுதிகள் :-
"வீரநாராயணன் பேரேரிக்கு மேற்க்கு பச்சை மலைக்கு கிழக்கு காவேரி ஆற்றுக்கு வடக்கு பெண்ணை ஆற்றுக்குத் உள்ளிட்ட பள்ளிகள் திருநாள்தொறும்"
The area of their habitation defined in this inscription covers a hilly and dry area extending roughly a hundred kilometers from north to south and eighty kilometers from east to west in Tiruchirapalli and South Arcot Districts (180 Sq/Kms).
கல்வெட்டின் இறுதியில் : "பல மண்டலங்களில் பள்ளி நாட்டவரோம்", "பள்ளி நாட்டவர் வம்சம் விளங்க" என்று குறிப்பிடப்பட்டுள்ளது

கல்வெட்டு வாசகம்:

  1.  ஸ்வஸ்தி ஶ்ரீ திரிபுவனச் சக்கரவத்தில் ஶ்ரீ பராக்கிரம பாண்டிய தேவர்க்கு யாண்டு ச(4) ஆவது வைகாசி மாதம் நாலாந் தியதி பல மண்டலங்களில் நாடும் நகரமும் எல்லா மண்டலங்களில்
  2.  பலநாட்டவரும் பழி காரியங் கேழ்ப்பதாக உள்ளூரில் பெரிய நாட்டான் காவி நிரவற குறைவறக் கூடி இருக்க உடையார் குற்றம் பெறுத்தருளிய நாயனார்
  3.  கோயிலில் எங்கள் மூதாதிகள் கல்வெட்டினபடி திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஶ்ரீ விக்கிரம சோழ தேவர்க்கு பாண்டு ச(4) ஆவதுமுடிகொண்ட சோழ வளநாட்டு உகளூர் கூற்றத்து இறையான புஞ்
  4.  சை குரங்காடி மகாதேவர்க்கு இந்நாட்டில் ஆய்க்குடியில் காணி உடைய பள்ளிகளில் பொன்னநான முஇடிகொண்ட சோக முத்தரையன் உள்ளிட்டாரும் ஓலைப்பாடியில் காணி உடை
  5. .ய பள்ளிகளில் காரிகிரிச்சன் விக்கிரமசோழ முத்தரையன் உள்ளிட்டாரும், தொங்கபுரத்தில் காணி உடைய பள்ளிகளில் அழகந் அம்பலவன் குலோத்துங்க சோழ முத்தரையன் உள்ளிட்டாரும்
  6.  மகதை மண்டலத்து தொழுவூர் பற்றில் குறுக்கையில் காணி உடைய பள்ளிகளில் பாண்டியன் சொக்கன் மரகதசோழ முத்தரையன் உள்ளிட்டாரும் இவனைவரோம் கல்வெட்டி குடுத்த ப
  7. ரிசாவது இன்னாயநார் கோயிலில் திருமேனி நாயமார் பெரிய வடுகன் கலகத்தில் செமம..... தோரசமுத்திரதேற எழுந்தருளி போகையில் இன்னாயமாற்கு நெடு அத்தம் குடுத்து மீண்டும் கோயிலிலே எழுந்த
  8.  ருளப் பண்ணிநர்களென்று கொண்ட உபயமாவது இன்னாயநார் திருநாளுளிட்ட பல திவலைகளுக்கும் அமுதுபடிக்கும் அரிசி நூற்றுக் கலமும் படிவெஞ்சனமஞ் சாத்துபடிக்கு காசு ஐயாயிரமும் இந்
  9. த குறுக்கையில் காணி உடைய பள்ளிகளில் மரகத சோழ முத்தரையன் உள்ளிட்டார் திருநாளகத்தோறும் குறைவறுத்து வீரநாராயணன் பேரேரிக்கு மேற்கு பச்சை மலை கிழக்கு
  10.  காவேரி ஆற்றுக்கு வடக்கு பெண்ணை ஆற்றுக்கு தெற்கு உள்ளிட்ட பள்ளிகள் திருநாள்தோறும் குடிக்கு ஐம்பது காசும் அரிசி குறுணியுமாக நாட்டில் வெண்கலம் எடுத்து மண்கலம் இடித்து(ம்)
  11.  குத்தியும் தண்டியும் முதலாக்கி திருநாள்தொறும் இப்படி குறைவறுக்கக் கடவோமாகவும் சம்மத்திதுச் சந்திராதித்தவரையும் செல்லக் கல்வெட்டிக் குடுத்தோம் பள்ளி நாட்டவரோம் இப்படி செய்
  12.  த பள்ளி நாட்டவர்க்கு பட்டுப் பரிவட்டமும் திருமுனொடுக்கும் பெறக் கடவதாகவும் எழுந்தருளிப் புறப்பட்டால் "வந்தான் தேவர்கள் தேவன்" என்கிற திருச்சின்னத்து முன்பே "பன்னாட்டான் தம்பிரான்" என்கிற திரு
  13.  ச் சின்னம் பணிமாறக் கடவதென்று பெருமாள் குலோத்துங்க சோழ தேவர் திருவாய் மலர்ந்தருளின படிக்கு ச்ரீ மாஹேஸ்வர ரஷை இக்கல்வெட்டினபடியே திருனாளகத்தொறும் தண்டி கொ
  14. ள்ளவும் இன்னாயநாற்கு அமுதுபடி சாத்துபடிக்கு உடலாக நாலவது முதல் வில்லுக்கொரு பணமாக...... வெண்கலம் அடுத்தும் மண்கலம் உடைத்தும் குத்தியும் அடிக்கடி தண்டியு(ம்) முத
  15. நாக்கவும் இதுக்கு இலங்கணமஞ் சொன்னாருண்டாகில் நம்மிலொருவன் அல்லவாகவும் இவன் (ஹ)பத்தி..... சோழன் எடுத்த இந்நாயனாற்கு திருப்பணி
  16. க்கு முதலாக்கவும் இப்படி சம்மதித்த் சந்திராதித்தவரையுஞ் செல்ல கல்வெட்டிக் குடுத்தோம் பல மண்டலங்களில் பள்ளி நாட்டவரோம் இப்படிக்கு இவை பல
  17.  மண்டலங்களில் பள்ளி நாட்டவர் பணியால் இடங்கை விக்கிரம.... எழுத்து பள்ளி நாட்டவர் வம்சம் விளங்க.

இதன் முலம் வன்னியர்கள் 11ம் நூற்றாண்டு முதலே  "தேவர்கள்" மற்றும்  "பன்னாட்டார் " என்று அழைகப்படதையும். மேலும் அவர்களுக்கு  இப்பட்டங்களை தந்து கவுரவித்தது சோழனும் பாண்டியனும்  என்பதன் மூலம் வன்னியர்கள் அன்று இருந்த உயர்ந்த நிலையையும் வரலாற்று முக்கியத்துவத்தையும் அறிந்து கொள்ள முடிகிறது  

(Reference : ஆவணம், இதழ்-18, பக்கம் 84-86), (A.R.E. No.35 of 1913).

நன்றி